Tuesday, October 2, 2012

சிரிங்க சிரிங்க.

துன்பம் வரும் வேளையிலே...

”என்ன குப்பம்மா... 3 வாரத்துல திருப்பித் தாரேன்னு வாங்கின கடன 30 நாளாகியும் இன்னும் நீ திருப்பித் தரல ஞாபகமிருக்கா...”

”அட போம்மா... 3 மாசத்துல தாரேனு ஓட்டு வாங்கிட்டுப்போய் ஒன்றரை வருஷமாகியும் இன்னும் கரண்டே வந்தபாடில்ல...”

Sunday, September 9, 2012


ஆசிரிய பா

எனது தலைமை ஆசிரியர் திரு. தியாகராஜன் சார் அவர்கள் எனது திருமணத்துக்கு எழுதிய கவிதை இது. தற்பெருமைக்காக வெளியிடுகிறேனா, ஆசிரியர் தினத்தில் அவருக்கு பெருமை சேர்க்க வெளியிடுகிறேனா, கவிதைப்படி நடக்கிறேனா தெரியவில்லை. (அப்பவே என் மீது நாத்திக வா
சனை அடித்ததை இந்த கவிதை வெளிச்சம் போடுகிறது)

முருகா வாழ்க

அழகு என்றால் முருகு
முருகு என்றால் அழகு

மயிலேறும் முருகனல்ல நீ
மயில் வெறுக்கும் முருகன் நீ

வடிவேல் முருகனல்ல நீ
வடிவில் மனத்தில் முருகன் நீ

சேவற்கொடி முருகன் அல்ல நீ
சேவைக்கு ஓடிவரும் முருகன் நீ

குன்றேறும் முருகன் அல்ல நீ
குணக்குன்று முருகன் நீ

திருச் செந்தில் அதிபன் அல்ல நீ
திருமகள் இலட்சுமி தாணையத்தான் நீ

வணக்கத்திற்குரிய வாலறிவன் அருளால்
வாழிய பல்லாண்டு நலமுடனே

என வாழ்த்தும்
ஆசிரியர்
தா.தியாகராஜன்.
2.9.96

சிரிங்க பாஸ்

இதுதான்டா ஃபேஸ்புக் நட்பு

பேஸ்புக்ல ரெக்கொஸ்ட் கொடுத்து நண்பர்கள் ஆனோம். 
லைக், கமெண்டுனு நாட்கள் உருண்டோடின. 
ஒருநாள் சாட்டிங். எங்கே இருக்கீங்கனு விசாரிக்க ஆரம்பிச்சேன். சென்னைதான். நானும்தான். இந்த ஏரியா... நானும் அதே ஏரியாதான். இந்த தெரு... அட நானும் அதே தெருதான். 
வீட்டு நம்பர்? ஆச்சர்யம் தாங்கல. பக்கத்து வீட்டு நம்பர். 

அப்புறம்தான் புரிஞ்சுது. அவர் என் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்.
தினமும் எதிர் எதிரே பார்த்தாலும் பார்க்காத மாதிரி போவோமே அவரா இவர்? 

# பக்கத்து வீட்ல யார் இருக்கானு கூட விசாரிச்சு தெரிஞ்சுக்காத சென்னையில இந்த நட்பு அவசியம்தான்.

சிரிங்க பாஸ்

எதுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமோ?

என் மகன் படிக்கும் வகுப்பில் ஒரு நிறுவனம் வந்து டெஸ்ட் ஒன்றை வைக்கிறது. சுமார் அறுபது மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்த தேர்வில் என் மகன் முதல் ரேங்க் வாங்கிவிட்டான். அதற்கான சர்டிபிகேட்டை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். பிரமாதமாக இருந்தது சர்டிபிகேட். அசத்தலாக இருந்தது சர்டிபிகேட். ஆனால் எனக்கு ஆச்சரியம். 'ஆங்கிலத்தில் பாஸ் மார்க் வாங்கவே கடும் சிரமப்படும் எ
ன் மகனா முதல் ரேங்க் வாங்கினான்' என்று ஆனந்தக் கண்ணீர் வேறு வர ஆரம்பித்தது.

அவனிடம் விசாரித்தேன். ''நான் அந்த கொஸ்ட்டின் பேப்பர படிக்கவே இல்ல. பதில் எழுத ஒரு பேப்பர் கொடுத்தாங்க. அதுல நம்பர் போட்டு ஏ, பி, சி, டி னு ஆப்சன் கொடுத்துருந்தாங்க. குருட்டாம்போக்குல டிக் பண்ணினேன். அவ்ளோதான். நான்தான் பர்ஸ்ட் ரேங்க்'' என்றான் சந்தோசத்தோடு.

''நீ படிச்சி வாங்கியிருந்தா நான் பாராட்டியிருப்பேன். இத எப்படி பாராட்டுறது''னு கேட்டேன்.
''போங்கப்பா. நீங்க ஒருமுறையாவது இப்படி சர்டிபிகேட் வாங்கினது உண்டா?''னு கேட்கறான்.

என்ன பண்றது? அறிவாளிங்க இப்படித்தான் செலக்ட் ஆவாங்களோ?

சிரிங்க பாஸ்

”சார் கவுண்டவுன் முடிஞ்சு ராக்கெட் கிளம்ப போற நேரத்துல நிறுத்த சொல்றீங்களே ஏன்?”

”மடையா.. மடையா... ராக்கெட்ல எலுமிச்சம் பழம் கட்ட மறந்துட்டோமே?”

# இந்தியாவின் 100வது ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோ தலைவர் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

Sunday, July 15, 2012

சிரிப்போ சிரிப்பு


இன்ஸ்டுமென்டை
நொறுக்கியது பல்
விழுந்தது பில்


ஒரு சொத்தைப் பல் ரொம்ப நாளா தொந்தரவு தந்துச்சு. டாக்டர்கிட்ட போனேன். அவரு புடுங்கிரலாம்னார். மறுநாளு அவர் சொன்ன மாதிரி பல் ஆஸ்பத்திரிக்கு போனேன். சோதனைகள் முடிஞ்சதும் பல்லைப் பிடுங்க ஊசி போட்டாங்க.

கொஞ்ச நேரத்துக்குப் பின்னால பல்லைப் புடுங்க டாக்டர் ஒருத்தர் வேகமா வந்தார். இன்னும் நெறைய பேஷண்டுகள பார்க்கணும் போல. ஆனா அவர் எதிர்பார்த்ததுபோல அந்த பல்லை புடுங்குறது அவ்வளவு லேசான வேலை இல்லைனு புரிஞ்சுபோச்சு எனக்கு. பல இன்ஸ்டுமென்டுகளை மாற்றிப் பார்த்தார். ஊஹூம்... பல் அசைவேனாங்குது. விடாப்பிடியாக வர மறுக்குது.

உடனே இன்னொரு டாக்டர் களத்துல குதிச்சார். அவரும் பல முறை இழுத்தும், அசைச்சுப் பார்த்தும் ஊஹூம்.. பல் அசைஞ்சு கொடுக்கல. நான் பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்கேன். எனக்கு தைரியம் சொன்னபடியே முழு பலத்தோடு இழுக்க... 'பட்' என்ற சத்தம்.

'உடைந்துவிட்டதே...' டாக்டர் சொல்வது காதில் விழ, கண்ணை மூடிக் கொண்டிருந்த நான் லேசாக விழிச்சுப் பார்த்தேன்.

'இன்ஸ்டுமென்ட்தான் உடைந்துவிட்டது...' என்றார் டாக்டர்.

இனி இது சரிப்படாது என்ற முடிவுக்கு வந்த டாக்டர் சிறு சுத்தியால் பல்லை பதம் பார்த்தார். எதற்கும் அசைந்து கொடுக்காத பல் இப்போது ஆட்டம் கண்டது. அடி மேல் அடி அடித்தால் பல்லும் நகரும் என்ற நம்பிக்கையோடு தம் பிடிச்சு இழுக்க பல் கையோடு கழன்றே விட்டது.

அப்பாடா... என்று டாக்டரும், பேஷண்டும் (நானும்) நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்னர் சாப்பிட வேண்டிய மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அடுத்து 'உங்களால் உடைஞ்ச இந்த இன்ஸ்டுமென்டுக்கும் சேர்த்துதான் பில் போட்டிருக்கிறேன்' என்றார் டாக்டர்.

'பல்லில் வைத்த பஞ்சை கடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு வாயை திறக்கக் கூடாது'னு முதல்லயே டாக்டர் சொல்லிட்டதால வாயை திறக்க முடியாமல் பணத்தை கட்டிவிட்டு வெளியில் வந்தேன்.


Tuesday, July 10, 2012

சிரிப்போ சிரிப்பு

பல் தெரிய சிரிக்கணும்


இப்போது பெரும்பாலும் எல்லா டிவிக்களிலும் மருத்துவப் பகுதி என்று நோயாளிகளின் கேள்விக்கு டாக்டர்கள் நேரடியாக பதில் சொல்லும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்படி ஒரு நிகழ்ச்சியை நான் நேரடியாக பார்த்ததன் எதிரொலி இந்த கற்பனை ஒளிபரப்பு.


வணக்கம் நேயர்களே... இன்று பல் சம்பந்தப்பட்ட 'பல்' வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல சிரிப்பூர்ல இருந்து வந்திருக்கிறார் நம்ம பால் டாக்டர் ஸாரி பல் டாக்டர் பல்லப்பன்...

''டாக்டர் ஆறு மாசம் ஒரு வருஷம்னு சிலர் பல் துலக்காம இருக்காங்க. அப்படிப் பட்டவங்களுக்கு ஏதாவது நோய் வருமா? திடீர்னு பல் துலக்க ஆரம்பிச்சா அதனால ஏதாவது சைடு எஃபக்ட் வருமா? கொஞ்சம் 'விளக்கி' சொல்லுங்க..''

''அது தப்பே இல்ல. ஆடு மாடு எல்லாம் பல் தேய்க்குதா? இல்லையே. நாம மட்டும் ஏன் தேய்க்கணும்?  எறும்பு ஊர கல்லும் தேயும்னு சொல்வாங்க. பல்ல தேய்க்க தேய்க்க தேய்ஞ்சு கடைசியில இல்லாமலேயே போகுமே. அது பத்தியும் நாம யோசிக்க வேண்டாமா?''

''சூப்பரா சொன்னீங்க டாக்டர்.. (சே இது தெரியாம நான் பல தடவ பல்ல விளக்கிட்டேனே) சொத்தைப் பல்லுனு டாக்டர்கிட்ட போனா சொத்தையே பிடுங்கிடுறார்னு பேசிக்கறாங்க. அதுபத்தி...''

''குட் கொஸ்டின்... அது என்னன்னா...''

''கொஞ்சம் பொறுங்க டாக்டர்... எவனோ ஒரு காலர் நம்மள பேசவிடாம லைன்ல வந்து தொலைக்கறான். முதல்ல அவன வழியனுப்புங்க... வணக்கம்.. உங்க பேர சொல்லுங்க சார்...''

''என் பேரு பல்லீஸ்வரன்.. ஹி..ஹி...''

''சரி சிரிச்சது போதும். பல் விளக்கவே மாட்டீங்களா.. இங்க வரைக்கும் வாடை தூக்குது.. கேள்விய கேட்டு தொலைங்க...''

''மேடம்.. கூச்சமா இருக்குது...''

''பல் எத்தனை நாளா கூச்சமா இருக்குது?''

''அது இல்லீங்க... உங்ககிட்ட சொல்ல கூச்சமா இருக்குனு சொல்ல வந்தேன். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் பல்லே தேய்க்கறது இல்ல. நீங்க மட்டும் சொல்லுங்க. ஒழுங்கா பல் தேய்க்கிறேன்.''

''லைன் கட்டாயிருச்சி. தொடர்ந்து நிகழ்ச்சிய பாருங்க... சரி டாக்டர் சொத்தை பிடுங்கறது பத்தி பேசிக்கிட்டு இருந்தோமே. அதுபத்தி சொல்லுங்க...''

''ஆமா. அது உண்மைதான். சொத்தை பல்லை பிடுங்கி நாங்க என்ன பண்ண முடியும்? அதுக்கா பல லட்சம் செலவழிச்சி டாக்டர் ஆகிறோம். ஆக்சுவலா முதல்ல நாங்க பல்லையே பாக்கறது இல்ல. எவ்ளோ சொத்து தேறும்னு பல்சதான் பார்ப்போம். லேசா பல் ஆடுதுனு வந்தா போதும். ரூட் கெனால், பைபாஸ், உரம் போடணும் அது இதுனு ஆளையே ஆட வச்சிருவோம்ல.''

(ப்ளீஸ் அந்த கேமராவ கொஞ்சம் என் பக்கமும் திருப்புங்க சார். டாக்டர் ஒரு கேள்விக்கு இருபது நிமிஷம் பதில் சொல்றார். இடையில நாலு கேள்விக்கு மட்டும் என் முகத்த காட்டவா இவ்ளோ மேக்கப் போட்டு வந்துருக்கேன். புரோகிராம பாருனு சொந்தபந்தத்துக்கு எல்லாம் எஸ்எம்எஸ் வேற அனுப்பியிருக்கேன். என் பல்லையும் கொஞ்சம் கேமிராவுல காட்டுங்கப்பா.)

''பழையபடி யாரோ ஒரு காலர். உங்க பேரு என்ன மேடம்?''

''பல்லழகி...''

''சொல்லுங்க பல்லழகி... என்ன பிரச்சனை உங்களுக்கு?''

''பல் எல்லாம் கொட்டிருச்சி... திரும்ப முளைக்குமா டாக்டர்?''

''வயசு என்னாச்சு?''

''எனக்கு இருபது டாக்டர். என் பல்லுக்கு பதினைஞ்சு...''

''அது எப்படி?''

''நான் பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சிதான பல் முளைச்சுதாம். ஆனா பல் கொட்டிப் போச்சுனு சொன்னது எங்க தாத்தாவுக்கு...''

''அவருக்கு தானா முளைக்காது. நாங்க செஞ்சு வச்சிருக்கோம். அதை செட்டா வாங்கி மாட்டிக்கலாம். சிங்கப்பல் செட், யானை பல் செட், முதலை பல் செட்டுனு பல வகை இருக்கு.. நீங்க உங்க ஊருக்கு பக்கத்தில உள்ள டாக்டர போய் பாருங்க. அவரு மத்தத சொல்வார்...''

''அங்க போனா காச புடுங்குவார்னுதான உன்கிட்ட கேள்வி கேட்கறேன் டுபுக்கு...''

''லைன் கட்டாயிருச்சி டாக்டர்...''

''நீங்கதான கட் பண்ணி காப்பாத்தினீங்க. தாங்ஸ்... நல்லதா போச்சி... இந்த ஜனங்களே இப்படித்தான். அடிக்கடி டாக்டர்கிட்ட பல்லக்காட்டினா எந்த பிரச்சனையுமே வராது...''

''ஜனங்களுக்குத்தான டாக்டர்...''

''இல்ல... டாக்டர்களுக்கு...''

''கேமரா ஓடுது கண்டத உளறாதீங்க.. நிகழ்ச்சி முடியப்போற நேரத்துல ஒரு காலர் வந்திருக்கார்.. என்ன சார் பிரச்சனை உங்களுக்கு?''

''டாக்டர் எனக்கு ஒரே பல்வலி...''

''நீங்க டாக்டர்கிட்ட காண்பிங்க...''

''இல்ல டாக்டர்.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணுகிட்ட பல்ல காட்டினேன். ஓங்கி அறைஞ்சிட்டா.. அதுல இருந்து யார்கிட்டயும் பல்லக் காட்டக்கூடாதுனு சபதம் போட்டிருக்கேன் டாக்டர். எங்க ஊர்ல ஒரே ஒரு லேடி டாக்டர்தான் இருக்காங்க டாக்டர் ப்ளீஸ்... இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க...''

''இன்னொரு காலன்... என்ன பிரச்சனை சார்...''

''மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. சினேகா மாதிரி இருக்கீங்க... சோ சுவீட்... என்ன பேஸ்ட் யூஸ் பண்றீங்கனு தெரிஞ்சுக்கலாமா?''

''டேய் மரியாதையா போன நீயே கட் பண்ணிடு. இல்ல.. இங்கேயிருந்து ஒரு குத்து விட்டேன்னா பல் எல்லாம் எகிறிடும்... அவன் கிடக்கிறான் விடுங்க டாக்டர். புரோகிராம் முடியிற நேரம் வந்தாச்சு. நேயர்களே அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி வணக்கம்.''

-முருகு.-


Thursday, July 5, 2012

சிரிப்போ சிரிப்பு


காமெடி கிங் யாரு?
சாமிகள் அடிதடி (30-4-06)

தேர்தல் பிரசாரத்தில் கோ.சாமியும், சு.சாமியும் எதிர் எதிரே சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது....
சு.சாமி: வாரும் கோ.சாமி... நானு யாரு தெர்யுமா... என்க்கு டமிலு நாட்ல மட்டும் இல்ல, உலகம் முழுக்கோ ரசிகருங்கோ இருக்காங்கோ. அந்த நம்பர் ஒன் இடத்த புடிச்சிரலாம்னு நீங்கோ கனவு காணாதீங்கோ...
கோ.சாமி: மதிப்பிற்குரிய அண்ணன் சு.சாமி அவர்களே...  நான் கர்ஜித்தால் அத்தனை பேரும் அரண்டு போவார்கள். என்னை மிரட்டலாம் என்று தாங்கள் கனவு காண வேண்டாம்.
சு.சா.:  டமிலு நாட்ல அதுவும் எலக்ஷன் டைம்ல நீங்கோ காமெடி பண்ணி என்  இடத்த புடிக்க நீங்க போடுற சதி திட்டம் எனக்கு புடிக்கல.
கோ.சா.: திறமை இருந்தால் வாய்ப்பு கிடைக்கும். அன்று நீர் காமெடி கிங். இன்று நான். அது காலத்தின் கோலம்.
சு.சா.: அது முடியாது... நான்தான் நிரந்தர காமெடி கிங். இடையில வந்து பிரச்னை பண்ண வேணாம். நீங்க பண்ண தேச விரோத செயல்கள், ஊழல்கள், பித்த லாட்டங்கள் எல்லாம் வெளியிட்ருவேன்.
கோ.சா.: நீங்கள் பண்ணாத அரசியல் பித்தலாட்டங்களா? அந்நிய நாட்டு ஏஜென்டிடம் கை நீட்டி...
சு.சா.: நா பணம் வாங்கினத புரூப் பண்ண முடியுமா? நீங்கோதான் கூட்டணி வைக்க போர்ட்டி குரோர்ஸ் வாங்கினதா உங்க தொண்டருங்களே கேள்வி கேட்கறாங்கோ... அப்படி வெல போறவன் இல்ல இந்த சு.சாமி...
கோ.சா.: சு.சாமி அவர்களே உங்கள் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். நீங்கள் எல்லாம் தலைவர்... உங்களுக்கு கட்சி ஒரு கேடா?
சு.சா.: மரியாதையா பேசும் கோ.சாமி... உங்கோ கட்சி லட்சணம் தெரியாதா? மொதல்ல 1.5 மக்கள் ஆதரவு. நேத்தைக்கு கணக்கெடுப்புல 1.3 சதவிகிதம் ஆதரவு.... இப்போ கணக்கெடுத்தா எவ்ளோவோ யாருக்கு தெரியும்.  ஹா... ஹா... இந்த லட் சணத்துல என்னை குறை கூற உமக்குதான் தகுதி இல்லை.
நீங்கோ எத்தன கோடி வாங்கிருக்குதுனு கண்டு புடிக்க சி.பி.ஐ. விசாரணை கேட்டு கேசு போடுவேன். இந்த நாட்டு மக்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்.
கோ.சா.: எனது கட்சிக்கு செல் வாக்கு இல்லை என்கிறீர். பின்னர் எப்படி நாப்பது கோடி தந்திருப்பார்கள்?
சு.சா.: அநியாயமா ஏமாந்து போனோமேனு பணம் கொடுத்தவா கவலயில இருக்கறதா எனக்கு தகவல் வந்திருக்கு. பணத்த திருப்பி கேட்டாலும் கேட்பாங்கோ.
கோ.சா.: குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றே வந்திருக்கிறீரா?
சு.சா.: குழப்புறது நான் இல்லே. இத்தன நாளும் பாசிச ஆட்சி... அராஜக ஆட்சி... ஒழிக்கணும்னு பேசின நீங்கோ அதே ஆட்சி நீடிக்கணும்னு குழப்பவாத அரசியல் பண்றது நீங்கோதான்.
கோ.சா.: கோபம் கொப்பளிக்கிறது. மரியாதையா போய்விடும்.
சு.சா.: என் காமெடி வழியில் வந்ததற்கு மரியாதையா மன்னிப்பு கேளும்... அல்லது உம் மீது வழக்கு போடுவேன்...
(வழக்கு என்றதும் கோ.சாமி கோபத்தின் உச்சிக்கே போய் கைகலப்பில் இறங்கிவிடுகிறார். வேடிக்கை பார்த்தவர்கள் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.)
கற்பனை: முருகு

TIME PASS


ஜெயில் லட்சுமியின்
மாஸ்டர் பிளான்

(26-4-06)
மோசடி வழக்கில் ஆஜராக கோர்ட்டுக்கு வந்த ஜெயலட்சுமியிடம் வேனின் ஓரமாக நின்று எடுத்த ஜிலீர் பேட்டி...
றீதேர்தல்ல போட்டியிடுவேன்னு சொல்லியிருந்தீங்களே?
ஆமா.  என்ன ஜெயில்ல போட்டதும் ஆத்திரத்துல அப்படி சொன்னேன். அப்புறமாதான் புரிஞ்சது அது நல்லதுக்குதான்னு. அதனால இந்த எலக்ஷன்ல போட்டியிடல.
றீஎன்னது ஜெயில்ல போட்டது நல்லதுக்கா?
உங்களுக்கு விசயம் தெரியாதா? ஜெயில்ல இருந்தா உடல் ஆரோக்யம் கிடைக்கும். சிலிம்மா ஆயிடலாம். தியாகி பட்டம் வேற கிடைக்கும்.
றீஜெயில்லயே காலத்த ஓட்டிட லாம்னு எண்ணமா?
இல்ல. ஆரோக்ய முகாம் முடிஞ்சதும் வெளியில வந்துடுவேன். இப்பவே கட்சி ஆரம் பிச்சி எலக்ஷன்ல நிக்க லாம்னுதான் திட்டம் போட்டிருந்தேன். ஆனா ஒரு மாசத்துக்கு 2 சீட் சம்மதமான்னு கூட்டணிக்கு கூப்பிட் டாங்க.   ஏன் அவசரப் படணும் முப்பது மாச மாவது உள்ள இருந்துட லாம்னு முடிவு  பண்ணிட்டேன்.
றீகாவல் துறையை கடுமையா எதிர்த் தீர்களே?
இப்போ அப்படி இல்ல. ஏன்னா நிரந்தர நண்பனும் இல்ல. நிரந் தர எதிரியும் இல்லங்க றதுதான் அரசியல்ல முதல் பாடம். போலீஸ் காரர்களை என் சகோத ரர்களாகத்தான் பார்க்கிறேன்.
றீஜெயில்ல எப்படி பொழுது போகுது?
ஆரோக்யம் பெறுவது எப்படி? பொது ஜனம் & போலீஸ் உறவு... இப்படி பல தலைப்புல முப்பது, நாப்பது புத்தகம் எழுதியிருக்கேன்.  புத்தக வெளியீட்டு விழாவை நான் வெளியில வந்ததும் பிரமாண்டமா நடத்துவேன். அடுத்ததா நாலு பார்ட் சினிமா எடுக்குற அளவு என் வாழ்க்கையை திரைக்கதையா எழுதிட்டு இருக்கேன்.
றீஎதிர்காலத் திட்டம் என்ன?
என்ன அப்படி கேட்டுட்டீங்க? 2011 தேர்தல்ல போட்டியிட்டு ஆட்சிய புடிக்கிறதுதான் லட்சியம்.
றீசினிமா நடிகர், நடிகைகள் பிரசாரத்துல குதிச்சிருக்காங்களே?
யாருக்கு எந்தத் தொழில் தெரியுதோ அதத்தான் செய்யணும். காசுக்கு ஆசப்பட்டு சம்பந்தமில்லாத வேலைய செய்றது தப்பு. சினிமாவுல நடிக்கவே அனுபவம் கேட்கும் போது அரசியல்ல குதிக்க அனுபவம் வேண்டாமா?
றீநடிகர், நடிகைகளுக்கு அரசியல் தெரியதுங்கறது உங்கள் கருத்தா?
தெரியாதவங்க அரசியலுக்கு வரக் கூடாதுன்னுதான் சொல்றேன். விந்தியாவுக்கும், சிம்ரனுக்கும் தமிழே தெரியாது. தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும்? ஏட்டுக்கும் எஸ்.பி.க்கும் வித்தியாசம் தெரியாத விந்தியா எல்லாம் அரசியல்பத்தி பேசக் கூடாது.
றீசினிமாவை வெறுத்து பேசுறீங் களே?
இல்லவே இல்ல. என் கதைய சினிமாவா தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் இன்னமும் காத்துக் கிடக்குறாங்க. கதை எழுதி முடித்த தும் சொந்தமா சினிமா தயாரிக்க லாம்னுதான் இருக்கேன். அப்ப தெரியும் சினிமாவ நான் எந்த அளவு நேசிக்கிறேன்னு.
றீசிறையில  எந்த குறையும் இல்லாம நிம்மதியா இருக்கீங்கனு எழுதிடலாமா?
ஒரே ஒரு குறை இருக்கு.  என்னன்னா டிவியில என் முகத்த அடிக்கடி காட்டினாங்க. இப்ப அப்படி காட்டுறதே இல்ல. ஜனங்க என்ன மறக்காம இருக்க டிவியில தொடர்ந்து என் முகத்தக் காட்ட ணும்னு உங்க மூலமா வேண்டுகோள் வைக்கிறேன். பழச மறக்காம என்னையும் பேட்டி எடுத்து பத்திரிகையில என் முகத்த காட்ட வந்த உங்களுக்கு நன்றி.
றீதமிழக வாக்காளர்களுக்கு உங்க வேண்டுகோள்...
வந்தாரை வாழவைக்கும் தமிழ கமே... வந்தாரால் வீழ்ந்து விடாதே... இதுதான் என் வேண்டுகோள்...
(அங்க என்ன பத்திரிகைகாரன் கிட்ட பேச்சு, வண்டியில ஏறும்மா... என்று போலீசார் மிரட்ட... ‘இதோ வந்துடுறேன் அண்ணே...’ என்று பவ்யமாக ஓட்டை வேனில் ஏறினார் ஜெயலட்சுமி.)
கற்பனை: முருகு

டைம் பாஸ்


தூக்கி எறிஞ்சா கண்ணு கொளமாச்சி... (16­-4-06)

அ.தி-.மு.க. கூட்டணியில் சீட்டுக்கு தவமாய் தவமிருந்து கேட்டது கிடைக்காததால் வேறு வழியின்றி தனித்து நிற்கிறார் விஜய டி.ராஜேந்தர். அவரது பாட்டை, பேச்சை கேட்போமா? (கற்பனைதாங்க!)
‘‘அடங்கொப்பன் மவனே... கொப்பன் மவனே... டண்டனக்கா... டண்டனக்கா... மதுவென்னும் அரக் கன விலக்குங்க என்றாரே காந்திஜீ... அவர் கொள்கய நாம மறந்துட்டோம்... இந்த நாடெங்கும் கடய தெறந்துட்டோம்...’’
இந்த பாட்ட நான் ஏன் இப்ப பாடுறேன்னு புரியுதா? எனக்கு எப்பவுமே நிரந்தர எதிரி மது. ஆனா இப்போ வீதிக்கு வீதி இருக்குது டாஸ்மாக். இந்த டி.ஆர். படமெல்லாம் எப்பவுமே வாங்கும் பாஸ்மார்க்... படம் எடுத்தா கதை, வசனம், எடிட்டிங், டைரக்ஷன், பாட்டு, இசை, ஒளிப்பதிவு எல்லாமே நான்தான். கட்சி நடத்தினா தலைவர், செயலாளர், பொருளாளர், மாவட்டம், வட்டம், நகரம், தொண்டன் எல்லாமே நான்தான்.
அந்தம்மாக்கு ராசி நம்பரு ஒம்பது! நான் கேட்ட சீட்டும் ஒம்பது! தந்திருந்தா பண்ணியிருக்க மாட்டேன் வம்பு! தராட்டி போன்னு துணிஞ்சி நிக்க இருக்குது தெம்பு! ‘டெபாசிட்’ போனா போகுது துரும்பு! இருக்கவே இருக்காண்டா சிம்பு!
இந்த இடத்துல வைக்கிறேன்டா ஒரு பாட்டு! யாரும் ஓடிடாதீங்க அத கேட்டு! தட்டிப் பாத்தேன் கொட்டாங்கச்சி... தாளம் வந்தது ‘சீட்ட’ வச்சி... ஊட்டி வளத்தேன் ஏலா என் தங்கச்சி... தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி... பாதியிலே வந்த சொந்தம் பெருசென்று நீ ஆதி முதல் வளத்த என்ன வெறுத்திட்டியே... யாரென்னு நீ கேட்கும் ஆளாகினேன்... போவென்று நீ விரட்டும் நாயாகினேன்...
யாருக்கும் அடிபணிய மாட்டான் இந்தத் தாடி! அப்படி தப்புக் கணக்கு போடுறவன் ஆயிடுவான் பேடி! என்ன எதுக்கிறவன் போயிடுவான் அரசியல விட்டே ஓடி! அரசியல்ல நான் பாக்காத ஆளா? சொடக்கு போட்டா போதும் ரசிகர் பட்டாளமே திரண்டு வரும். பேர மாத்திக்கிட்டா நான்தான் அடுத்த முதல்வர்னு சொன்னது ஜோசியரு! அதனால பேர மாத்திக்கிட்டான் இந்த டி.ஆரு.! பர்கூர் எலக்ஷன்ல விட்டேன்டா ரெயிலு! ஆனாலும் ஆயிட்டேன்டா பெயிலு! கோடையில தாங்கலடா வெயிலு! பழனி முருகனுக்கு வாகனம் மயிலு!
கோழிக்கு வந்தா கோழிக் காய்ச்சல். கொழந்தைக்கு வந்தா டெங்கு காய்ச்சல். அதுவே அரசியல்வாதிக்கு வந்தா தேர்தல் காய்ச்சல்.
லைசென்ஸ் வேணும்னா ஆர்டிஓ ஆபீசுல போடச் சொல்வாங்கடா எட்டு! அஞ்சு வருஷ ஆட்சிக்கு லைசென்ஸ் தான் நீங்க போடப் போற ஓட்டு! ஜெயிக்கணுமேனு கொட்டிக் கொடுப்பாங்க துட்டு! காச வாங்கிட்டு  வச்சுடாதீங்க எனக்கு வேட்டு!
 முருகு

சிரிப்போ சிரிப்பு


‘புலி’க்கு புத்துணர்வு முகாம்


மற்றவர்களை போல அப்படியே பேசி அசத்துவதில் கில்லாடி ‘மிமிக்ரி’ மகாதேவன். அவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை!

‘‘மகாதேவா... இன்னைக்கு வைகோ மாதிரி பேசுடா!’’ என்று நண்பர்கள் உசுப்பேத்தி விட்டனர். அது போலவே ‘மிமிக்ரி’ மகாதேவன் பேசுகிறார். (கற்பனையாகத்தான்!) கேளுங்களேன்...
‘‘தமிழகத்தில் ஓர் அரசியல் புரட்சி நடந்து முடிந்திருக்கிறது. எது நடக்காது என்று நினைத்தீர்களோ அது நடந்து முடிந்து விட்டது. நான்காண்டு காலம் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சிக்கு எதிராக பேசி வந்த நான் திடீரென்று அணி மாறி செல்ல காரணம் என்ன என்று ஒவ்வொரு தமிழனும், இங்குள்ள தமிழன் மட்டுமல்ல... இலங்கைத் தமிழன், இங்கிலாந்து தமிழன் உலகத் தமிழர் எல்லாம் விடை தெரியாமல் தவிக்கின்றனர். அந்த ரகசியத்தை சொல்ல வேண்டுமா? முடியாது. கூட்டணி தர்மம் சொல்ல விடாமல் என் வாயை கட்டிப் போட்டு இருக்கிறது.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பொடாவிலே கைது செய்து சிறையில் 19 மாதங்கள் அடைத்து வைத்த செல்வி ஜெயலலிதா வுடன் கூட்டா என்று கேட்கிறார்களே. அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அன்புச் சகோதரி அப்படி செய்ததில் என்ன தவறு கண்டீர்கள்? கைது செய்த போது எங்காவது ஒரு சிறு கல்லெறி சம்பவமா வது நடந்தது உண்டா? எங்களுக்குத் தெரியும் ‘கைது’ சரிதான் என்று!
அன்புச் சகோதரி ஆட்சியிலே யானைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தியதை பாராட்டினீர்களே. அவரது கருணை உள்ளத்தை வாழ்த்தினீர்களே. ஆனால் புலிகளுக்கு சிறப்பு முகாம் நடந்ததை கொடுமை என்கிறீர்களே... அதைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. ஆம்... என்னையும் எனது அருமைச் சகோதரர்களையும் சிறையில் தள்ளி செக்கிழுக்கவா வைத்தார்கள்? இல்லையே... தினமும் காலையில் காற்றோட்டமாக உடற்பயிற்சி, நோய் அண்டாமல் இருக்க பத்தியச் சாப்பாடு, பொழுதை இனிதே கழிக்க வாலிபால் விளையாட்டு, ஃபேன் வேண்டாம்... இயற்கைக் காற்றை சுவாசியுங்கள் என்ற  சுற்றுச்சூழல் பாங்கு... அடடா! மீண்டும் அந்தக் பொடா  காலம்... இல்லை இல்லை... பொற்காலம் வராதா என்றல்லவா ஏங்குகிறேன். சிறைச்சோலை எனக்கு பிடிக்கவில்லை என்றால் ஜாமீன் கேட்டிருக்க மாட்டேனா? ஏன் கேட்கவில்லை? அதன் பிறகுமா புரியவில்லை உங்களுக்கு!
தாய் சொல்லை தட்டி விட்டேன் என்று புரளி ஒரு பக்கம். நம்பி விடாதீர்கள் அ.தி.மு.க. நண்பர்களே... நம்பி விடாதீர்கள். என் தாய் சொன்னது என்ன? நூறு ‘சீட்’ கொடுத்தாலும் என் மகன் ஜெயலலிதா பக்கம் போகமாட்டான். அது உண்மைதான். இந்த இடத்திலே ஒரு ஃப்ளாஷ் பேக். அன்புச் சகோதரி என்னை சிறைச் சோலையிலே வைத்திருந்த நேரம். அவரது அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சோதனை காலம். அப்போது போலீஸ் வேனிலே கிழிந்த ‘சீட்’டில்தான் எனது பயணம்.
விடுதலையானதும் என் தாயாரிடம் இதைச் சொன்னேன். அப்போது அவர் ‘என்னதான் நிதிநெருக்கடி என்றாலும் ஒரு புது ‘சீட்’ வாங்கி போட்டிருக்கக் கூடாதா?’ என்று கண்ணீர் விட்டார். இனி நூறு ‘சீட்’ தந்தாலும் ஜெயிலுக்கு போகாதே என்றார். எம்.எல்.ஏ. ‘சீட்’ தந்தால் போகாதே என்று அவர் சொல்லவே இல்லை.
ஏதென்ஸ் நகரத்திலே ஒரு கூண்டுக்குள் எலியும், பூனையும் ஒன்றாக இருந்தால் ‘அதிசயம்’ என்று பாராட்டும் பத்திரிகை நண்பர்களை கேட்கிறேன். எதிர் எதிர் துருவத்தில் இருந்த நாங்கள் கூட்டு வைத்தால் ‘சந்தர்ப்பவாதமா?’
கூட்டு வைத்தது தவறு என்பவர்களை கேட்கிறேன். 2001 பொதுத் தேர்தலிலே கண்ணை கட்டி காட்டில் விட்ட புலி போல் தனித்து நின்றேனே. அதற்கு தங்கத் தமிழகம் தந்த பரிசு என்ன? ‘டெபாசிட்’ பறிபோனதுதானே மிச்சம்!
இறுதியாக தமிழக மக்களுக்கு சொல்லிக்  கொள்கிறேன். இதை சந்தர்ப்பவாதக் கூட்டு என்று சொல்வதை நிறுத்துங்கள். அல்லது குமரி முதல் மெரீனா வரை மாபெரும் நடைப்பயணம் ஆரம்பித்து விடுவேன்...
(போதும்... போதும்... வயிறு புண்ணா போச்சு என்று நண்பர்கள் கடிவாளம் போட மிமிக்ரி மகாதேவன் பேச்சை முடித்தார்.)

சென்னை 12-3-06

சிரிப்போ சிரிப்பு


கூட்டணியாம்... கூட்டணி!

(29-3-06)
தேரிக்குடியிருப்பு வாசகர்
என்.முருகன் இயற்றிய கானா கானம்.
(வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் மெட்டில் படித்து ரசிக்கவும்)
வைகோவுக்கும் ஜெயாவுக்கும் கூட்டணியாம்
அந்த லெட்டர் பேடு கட்சியெல்லாம் ஆதரவாம்
அந்த நடுத்தெருவில் நடக்குதய்யா ஒப்பந்தம்
அங்கு ஆளுங்கட்சி ஆளுங்கெல்லாம் கும்மாளம்
ஓ... ஓ-...
கூட்டணியாம் கூட்டணி கூட்டணியாம் கூட்டணி

ஊர்வலத்தில் ஆடி வரும் சி.ஆர்.சரசுவதி நாட்டியம்
என் மேளதாளம் முழங்கி வரும் காவல்துறை வாத்தியம்

மார்க்கெட் போன முரளி நடத்தி வர்றார் பார்ட்டியும்
நம்ம மார்க்கெட் போன முரளி நடத்தி வர்றார் பார்ட்டியும்
அங்கு தலைகுனிந்து போகுதய்யா ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் நட்புங்க
இத பார்த்துவிட்ட உளவுதுறை வச்சதய்யா பெட்டிங்க
பஞ்சாயத்து தலைவரான மதுரை ஆதீனம்தானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும்
உடன்பாடு தானுங்கோ
தொகுதி பங்கீடு முடிஞ்சு வருது பாருங்க      (வைகோவுக்கும்)

வைகோ சொந்தபந்தம் பொடாகைதிங்கோ
அந்த கணேசனும், செஞ்சியும்
கலகலன்னு இருக்குது
அம்மா சொந்த பந்தம் சசிங்கோ
அந்த பன்னீரும், வளர்மதியும்
வரவழைப்ப தருகுது வரவழைப்ப தருகுது

மதிமுக தலைவரு வைகோ கலிங்கப்பட்டிதானுங்கோ
அந்த அதிமுக தலைவி ஜெ.வுக்கு போயஸ் தோட்டம்தானுங்கோ
இந்த கூட்டணிய நடத்தி வைக்கும்
காளிமுத்து நம்ம அண்ணங்கோ
இந்த குளறுபடிய வாழ்த்துகின்ற
பெரிய மனுஷன் யாருங்கோ... (டப்... சோடா குடிக்கிறார்)
தலைவரு... திருமா... தானுங்கோ.

Mamtha

Sunday, June 24, 2012







சென்னை - தமிழ் முரசு




ஷூட்டிங்கும் மீட்டிங்கும்!

நடிகர் கார்த்திக்: என்ன? என்ன? பேட்டியும் இல்ல. ஒண்ணுமில்ல. யார்? யார் வரச்சொன்னது உங்கள?
நிருபர்: உங்க பேட்டி, அறிக்க வரா தான்னு தமிழகமே ஏங்கிக்கிடக்குது. பேட்டி கிடையாதுன்னா எப்படி சார்?
கார்த்: சும்மா... சும்மா சொல்றீங்க. நான் தான் ஒரு ரவுண்டு போய்ட்டு வந்துட்டேனே.
நிரு: பரவாயில்ல. உங்க கொள்கை கள் மக்களுக்கு போய் சேரவேண்டாமா--?
கார்த்: ஓகே... ஓகே... பேட்டிய சீக்கிரமா முடிச்சிரணும்.
நிரு: நீங்க அரசியலுக்கு வர காரணம் என்ன?
கார்த்: பாத்தீங்கள்ல இதுக்குதான் பேட்டி வேணாம்னு சொன்னேன். எனக்கே காரணம் தெரியாத கேள்வியெல்லாம் கேட்டு குழப்புவீங்க...
நிரு: அதவிடுங்க. நீங்க ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கல?
கார்த்: பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்நாட்டுல பெரிய கட்சினு கேள்விப்பட்டேன். அதுல நின்னா உடனே சிஎம் ஆயிடலாம். அப்புறம் பார்லிமெண்ட் எலக் ஷன்ல பிஎம் ஆயிடலாம்னு ஒரு கணக்கு... சின்ன கணக்கு... அவ்வளவுதான்... ஆனா நான் என்னவோ சினிமாவுல ‘பிளாக்’ மணி வாங்குனேன்... அதான் பார்வர்டு ‘ப்ளாக்’ புடிச்சி போச்சிதுனு சிலர் பேசிக்கறாங்களாம். அதெல்லாம் சும்மா... தப்பு... தப்பு...
நிரு: கூட்டணி அமைக்கலாம்னு நீங்க பேசியிருந்தீங்களே--?
கார்த்: எஸ்... எஸ்... பேசுனேன்... இப்போ என்ன அதுக்கு? கூட்டணி சேந்து ஜெயிச்சோம்னா துணை முதல்வர் பதவிய அந்தக் கட்சிக்கு கொடுக்க நான் தயாராதான் இருந்தேன். யாருமே அதுக்கு ரிஸ்க் எடுக்கலையே... அதான் 111 தொகுதியில தனிச்சி போட்டினு அறிவிச்சிட்டேன்.
நிரு:அத்தனையும் ஜெயிச்சாலும் தனி மெஜாரிட்டி கெடைக்காதே-?
கார்த்: அது எனக்கு அவ்வளவா தெரியாது. இருந் தாலும் தேர்தலுக்கு பின்னாடி கூட்டணி ஆட்சி தான் வரும்னு பேசிக்கி றாங்க இல்லையா... அப்போ என்ன முதல்வர் ஆக்குனாதான ஆதரவு கொடுப் பேன்...
நிரு: உங்க முதல் எதிரி யார்?
கார்த்: எதிரியா? எனக்கு சினிமாவுலயும், அரசியல் லயும் எதிரியே கெடயாது.
நிரு: சந்தானத்த கட்சிய விட்டு நீக்கிட்டீங்களே அது சரியா?
கார்த்: அவருக்கு யாரையும் அனுசரிச்சி போகத்தெரியல... அதான்...
நிரு: திராவிட கட்சிகள பத்தி உங்க கருத்து என்ன?
கார்த்: அய்யோ... அவ்வளவு பெரிய கேள்வியெல்லாம் கேட்கறதே தப்பு... பார்வர்டு பிளாக் கட்சிய பத்தியே எனக்கு இன்னும் தெரியாது... அரசியல்ல எனக்கு ரெண்டு பேரதான் தெரியும். ஒன்னு பிஸ்வாஸ், இன்னொருத்தர் சந்தானம். ஸோ...  திராவிட கட்சி... அது இதுன்னு கேட்டு என்ன குழப்பாதீங்க... ப்ளீஸ்...
நிரு: உங்க கூட்டம்னாலே கூச்சல் குழப்பத்துல பாதியிலேயே முடிஞ்சு போகுதே?
கார்த்: அதான் எனக்கும் புரியல... உங்களுக்கு தெரியுமா? ஒருவேள சந்தானம் ஆட்களோட சதியா இருக்குமோன்னு தோணுது...
நிரு: போஸ்டர் ஒட்டக்கூட தேர்தல் கமிஷன் தடை போட்டிருக்கே?
கார்த்: சினிமாவுக்கு எப்படி போஸ்டர்அவசியமோ அப்படித்தான அரசியலுக்கும். அததடுக்குறது தப்பில்லையா? இருந்தாலும் பிஸ்வாஸ் கிட்ட கேட்டுதான் என்னால எதுவும் சொல்ல முடியும்...
நிரு: தேர்தல் வாக்குறுதியா என்ன கொடுக்கப் போறீங்க?
கார்த்: அதெல்லாம் கட்சியோட அகில இந்திய தலைமை பாத்துக்கும்.
நிரு: ஒருவேள நீங்க முதல்வர் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?
கார்த்: ஹா... ஹா... ஹா... ஹே... ஹே... ஹே... அந்த அதிர்ஷ்டம் தமிழக மக்களுக்கு இருக்கான்னு தெரியலையே...
நிரு: சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்திருக்கீங்க... இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கார்த்: பெரிய வித்தியாசம் எதுவுமே இல்ல. அதுல பாட்டு, பைட்டு எல்லாம் உண்டு. இதுல கெடயாது... அதுல டைரக்டர் சொல்றபடி நடிக்கணும்... உம்... இதுல தலைவர் சொல்றபடி நடிக்கணும். அது வெற்றியா தோல்வியானு ரிலீஸ் அன்னைக்கு தெரிஞ்சிடும்... இதுவும் ஓட்டு எண்ற அன்னைக்கு தெரிஞ்சிடும். அதுல ஹீரோதான் ஜெயிப்பாங்க... இதுல யார் வேணாலும் ஜெயிக்கலாம்... உம்... அதுல என்னால ஷூட்டிங் கேன்சல் ஆகும்... இதுல என்னால மீட்டிங் கேன்சல் ஆகுது...
நிரு: அரசியலபத்தி இவ்வோ தெரிஞ்சி வச்சிருக்கீங்களே... பாராட்டுக்கள்... யாருக்கும் ஆதரவு இல்லைன்னு நடிகர் ரஜினிகாந்த் அறிவிச்சிருக்காரே... அது பத்தி...
கார்த்: இதுக்குமேல என்னால பதில் சொல்ல முடியாது. வேணும்னா என் ‘டூப்’ப அனுப்பி வைக்கிறேன்...
(விருட்டென எழுந்து சென்று விட்டார். இப்படி ஒரு தலைவரா? பெருமூச்சுவிட்டபடி நடையை கட்டினார் நிருபர்)
முருகு
  சென்னை 26&3&06


சென்னை 8&3&06 தமிழ் முரசு

வந்துட்டாரய்யா வடிவேலு!


நடிகர் வடிவேலுவிடம் இருந்து  ‘பிரஸ்மீட்’ என்று அவசர அழைப்பு பத்திரிகை அலுவலகங்களுக்கு பறந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவரது வீட்டின் முன் நிருபர்கள் நிரம்பி வழிந்தனர். எதற்காக திடீர்னு வரச் சொன்னார் என்று யாருக்குமே புரியவில்லை.
குறிப்பிட்ட நேரத்தில் வடிவேலு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடி மாடியில் இருந்து இறங்கி வந்தார்.
(வாசலில் நின்றிருந்த நான்கைந்து பேர் ‘அண்ணன் வடிவேலார்’ வாழ்க என்று கோஷம் போட பரபரப் பானது)
இனி அங்கிருந்து நேரடி ஒளிபரப்பு...
வடிவேலு: வணக்கம்.திடீர்னு உங்கள ஏன் வரச்சொன் னேன். எதுக்கு வரச்சொன்னேன்னு மண்டய போட்டு கொழப்பிக்காதீங்க. நானே சொல்லிடுறேன். புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன். எலக்ஷன்ல தனிச்சி போட்டிபோட்டு ஆட்சிய புடிக்கப் போறேன்.
நிருபர் குறுக்கிட்டு: இது உங்க அடுத்த படத்தோட கதையா சார்?
வடி: என்ன காமடி பண்றதா நெனப்பா... நான் எவ்வளவு சீரியசா சொல்லிட்டு இருக் கேன். கதையாம்ல கத. ஏன் நான் கட்சி ஆரம்பிக்கபடாதா? ஆட்சிய புடிக்கப் படாதா?
நிரு: ஏன் சார் திடீர்னு கட்சி ஆரம் பிக்கிறீங்க-? சினிமா வுல இருந்து ஓய்வு பெறப் போறீங்களா?
வடி: என்ன நக்கலா...  மத்தவய்ங்க மாதிரி சினிமாவுல சான்ஸ் இல்லாம நான் கட்சி ஆரம்பிக்கலப்பு. இந்த நாட்டு அப்பாவி ஜனங்களுக்கு ஏதாவது செய்யணுங்கற வெறிதான். லட்சியம்தான்.
நிரு: உங்க கட்சிக்கு பேரு என்ன?
வடி: தே.ஆ.மு.தி.க.
நிரு: விளக்கமா சொல்லுங்க சார்...
வடி: அதாவது ‘தேசிய ஆண்கள் முன்னேற்ற திராவிட கழகம்’.
நிரு: கட்சியோட லட்சியம்--?
வடி:  பேர பாத்தாலே புரியலயாக் கும். இந்த நாட்டுல தெனம் தெனம் பொம்பளங்க கையால அடி உத வாங்கி அவஸ்தப்படுற ஆண்களுக்கு தைரியத்த கொடுத்து அவங்கள காப்பாத்துறதுதான் தே.ஆ.மு.தி.க. லட்சியம்.
(வருங்கால முதல்வர்... ஆண்களின் விடிவிளக்கு அண்ணன் வடிவேலார் வாழ்க என்று வீட்டுக்கு வெளியே மீண்டும் கோஷம்)
வடி: பாத்தீங்கள்ல ஆண்கள் எப்படி எம்மேல உசிர வச்சிருக்காங்கனு!
நிரு: அதுசரி. பெண்கள் ஓட்டு உங்க கட்சிக்கு விழாதே--?
வடி: இப்படி வெவரம் இல்லாம பேசக்கூடாது. இப்ப ஆண்கள் எல்லாரும் பயந்து போயி பொம்பளங்க சொல்ற சின்னத்துல ஓட்டு போடுறாங்க. நான் ஆண்களுக்கு தைரியத்த ஊட்டுன பிறகு பாருப்பு. அத்தனை பொம்பளங்க ளையும் அடக்கி அவங் களயும் எனக்கே ஓட்டுப் போட வச்சிருவாங்க.
 (நிருபர்கள் கூட்டத்தில் யாரோ சிரிப்பது காதில் விழ வடிவேலு முறைக்கிறார்)
என்னால சிரிச்ச வய்ங்க இப்ப  எல்லா கட்சியிலயும் இருக்காங்க.
நான் கட்சி ஆரம் பிச்ச விசயம் தெரிஞ்சதும் என் பக்கம் வந்துருவாங்க.
நிரு: நீங்க கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருக்குதா?
வடி: எங்கட்சியோட எந்த கட்சியாவது கூட்டணி வச்சுக்க வாய்ப்பு இருக்கானு கேட்ருக்கணும். சரி பரவால்ல. அப்படி எந்த கட்சியா வது ஆசப்பட்டா ஒரே ஒரு கண்டிஷன்தான். நான்தான் முதலமச்சர். சம்மதம்னா ஓகே.
நிரு: அப்ப நாங்க கிளம்பட்டுமா?
(நிருபர்கள் எழுந்திரிக்க)
வடி: உட்காருங்க... உட்காருங்க... அப்படி என்ன அவசரம்? இன்னும் நாலு கேள்விய கேளுங்க. பெருசா பத்திரிகையில போடுங்க. அப்ப தான் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரும்.
(இப்படி மாட்டிக்கிட்டோமே என்று ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்)
நிரு: சரி. நீங்க தொடர்ந்து சினிமாவுல நடிப்பீங்களா?
வடி: அது எப்படிப்பு முடியும்? அதான் எலக்ஷன்ல ஜெயிச்சி நான் சிஎம் ஆயிருவேன்ல... சிஎம் ஆயிருவேன்ல... வேணும்னா ஒண்ணு பண்ணலாம். ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி சினிமாவுல நான் நடிக்கணுமானு கேட்கலாம். அவய்ங்க விருப்பப்பட்டா வருஷத்துக்கு ஒன்னோ ரெண்டோ நடிச்சிக் கொடுத்துட்டு போறேன்.
நிரு: அதே மாதிரி அரசியலுக்கு நீங்க வரணுமானு ஒரு கருத்துக் கணிப்பு இப்பவே நடத்தினா என்ன?
வடி:  இந்த குண்டக்க மண்டக்க கேள்விதான வேண்டாங்கறது... இதுக்கெல்லாம் பயப்படுற வன் நான் இல்ல. ஆம்பள சிங்கம்டா.
(வடிவேலு கோபத்தின் உச்சிக் குப் போக, நடிகர் பார்த்திபன் வந்து கொண்டிருப்பதாக அவரது காதில் உதவியாளர் கிசுகிசுக்கிறார்)
வடி: யாரு? ஐயோ அவனா... இங்கயும் வந்துட்டானா... கேள்வி கேட்டே கொன்னுபுடுவானே சாமி... போதும் சாமி... போதும் நான் அரசியலுக்கே வரல...
(வீட்டுக்குள் ஓடி ஒளிகிறார்)
நிருபர்கள் அதை மட்டும் குறித்துக்கொண்டு நிம்மதியாக விட்டனர் ஜூட்!


முருகு