Sunday, September 9, 2012
ஆசிரிய பா
எனது தலைமை ஆசிரியர் திரு. தியாகராஜன் சார் அவர்கள் எனது திருமணத்துக்கு எழுதிய கவிதை இது. தற்பெருமைக்காக வெளியிடுகிறேனா, ஆசிரியர் தினத்தில் அவருக்கு பெருமை சேர்க்க வெளியிடுகிறேனா, கவிதைப்படி நடக்கிறேனா தெரியவில்லை. (அப்பவே என் மீது நாத்திக வா
சனை அடித்ததை இந்த கவிதை வெளிச்சம் போடுகிறது)
முருகா வாழ்க
அழகு என்றால் முருகு
முருகு என்றால் அழகு
மயிலேறும் முருகனல்ல நீ
மயில் வெறுக்கும் முருகன் நீ
வடிவேல் முருகனல்ல நீ
வடிவில் மனத்தில் முருகன் நீ
சேவற்கொடி முருகன் அல்ல நீ
சேவைக்கு ஓடிவரும் முருகன் நீ
குன்றேறும் முருகன் அல்ல நீ
குணக்குன்று முருகன் நீ
திருச் செந்தில் அதிபன் அல்ல நீ
திருமகள் இலட்சுமி தாணையத்தான் நீ
வணக்கத்திற்குரிய வாலறிவன் அருளால்
வாழிய பல்லாண்டு நலமுடனே
என வாழ்த்தும்
ஆசிரியர்
தா.தியாகராஜன்.
2.9.96
முருகா வாழ்க
அழகு என்றால் முருகு
முருகு என்றால் அழகு
மயிலேறும் முருகனல்ல நீ
மயில் வெறுக்கும் முருகன் நீ
வடிவேல் முருகனல்ல நீ
வடிவில் மனத்தில் முருகன் நீ
சேவற்கொடி முருகன் அல்ல நீ
சேவைக்கு ஓடிவரும் முருகன் நீ
குன்றேறும் முருகன் அல்ல நீ
குணக்குன்று முருகன் நீ
திருச் செந்தில் அதிபன் அல்ல நீ
திருமகள் இலட்சுமி தாணையத்தான் நீ
வணக்கத்திற்குரிய வாலறிவன் அருளால்
வாழிய பல்லாண்டு நலமுடனே
என வாழ்த்தும்
ஆசிரியர்
தா.தியாகராஜன்.
2.9.96
சிரிங்க பாஸ்
இதுதான்டா ஃபேஸ்புக் நட்பு
பேஸ்புக்ல ரெக்கொஸ்ட் கொடுத்து நண்பர்கள் ஆனோம்.
லைக், கமெண்டுனு நாட்கள் உருண்டோடின.
ஒருநாள் சாட்டிங். எங்கே இருக்கீங்கனு விசாரிக்க ஆரம்பிச்சேன். சென்னைதான். நானும்தான். இந்த ஏரியா... நானும் அதே ஏரியாதான். இந்த தெரு... அட நானும் அதே தெருதான்.
வீட்டு நம்பர்? ஆச்சர்யம் தாங்கல. பக்கத்து வீட்டு நம்பர்.
அப்புறம்தான் புரிஞ்சுது. அவர் என் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்.
தினமும் எதிர் எதிரே பார்த்தாலும் பார்க்காத மாதிரி போவோமே அவரா இவர்?
# பக்கத்து வீட்ல யார் இருக்கானு கூட விசாரிச்சு தெரிஞ்சுக்காத சென்னையில இந்த நட்பு அவசியம்தான்.
பேஸ்புக்ல ரெக்கொஸ்ட் கொடுத்து நண்பர்கள் ஆனோம்.
லைக், கமெண்டுனு நாட்கள் உருண்டோடின.
ஒருநாள் சாட்டிங். எங்கே இருக்கீங்கனு விசாரிக்க ஆரம்பிச்சேன். சென்னைதான். நானும்தான். இந்த ஏரியா... நானும் அதே ஏரியாதான். இந்த தெரு... அட நானும் அதே தெருதான்.
வீட்டு நம்பர்? ஆச்சர்யம் தாங்கல. பக்கத்து வீட்டு நம்பர்.
அப்புறம்தான் புரிஞ்சுது. அவர் என் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்.
தினமும் எதிர் எதிரே பார்த்தாலும் பார்க்காத மாதிரி போவோமே அவரா இவர்?
# பக்கத்து வீட்ல யார் இருக்கானு கூட விசாரிச்சு தெரிஞ்சுக்காத சென்னையில இந்த நட்பு அவசியம்தான்.
சிரிங்க பாஸ்
எதுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமோ?
என் மகன் படிக்கும் வகுப்பில் ஒரு நிறுவனம் வந்து டெஸ்ட் ஒன்றை வைக்கிறது. சுமார் அறுபது மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்த தேர்வில் என் மகன் முதல் ரேங்க் வாங்கிவிட்டான். அதற்கான சர்டிபிகேட்டை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். பிரமாதமாக இருந்தது சர்டிபிகேட். அசத்தலாக இருந்தது சர்டிபிகேட். ஆனால் எனக்கு ஆச்சரியம். 'ஆங்கிலத்தில் பாஸ் மார்க் வாங்கவே கடும் சிரமப்படும் எ
என் மகன் படிக்கும் வகுப்பில் ஒரு நிறுவனம் வந்து டெஸ்ட் ஒன்றை வைக்கிறது. சுமார் அறுபது மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்த தேர்வில் என் மகன் முதல் ரேங்க் வாங்கிவிட்டான். அதற்கான சர்டிபிகேட்டை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். பிரமாதமாக இருந்தது சர்டிபிகேட். அசத்தலாக இருந்தது சர்டிபிகேட். ஆனால் எனக்கு ஆச்சரியம். 'ஆங்கிலத்தில் பாஸ் மார்க் வாங்கவே கடும் சிரமப்படும் எ
ன் மகனா முதல் ரேங்க் வாங்கினான்' என்று ஆனந்தக் கண்ணீர் வேறு வர ஆரம்பித்தது.
அவனிடம் விசாரித்தேன். ''நான் அந்த கொஸ்ட்டின் பேப்பர படிக்கவே இல்ல. பதில் எழுத ஒரு பேப்பர் கொடுத்தாங்க. அதுல நம்பர் போட்டு ஏ, பி, சி, டி னு ஆப்சன் கொடுத்துருந்தாங்க. குருட்டாம்போக்குல டிக் பண்ணினேன். அவ்ளோதான். நான்தான் பர்ஸ்ட் ரேங்க்'' என்றான் சந்தோசத்தோடு.
''நீ படிச்சி வாங்கியிருந்தா நான் பாராட்டியிருப்பேன். இத எப்படி பாராட்டுறது''னு கேட்டேன்.
''போங்கப்பா. நீங்க ஒருமுறையாவது இப்படி சர்டிபிகேட் வாங்கினது உண்டா?''னு கேட்கறான்.
என்ன பண்றது? அறிவாளிங்க இப்படித்தான் செலக்ட் ஆவாங்களோ?
அவனிடம் விசாரித்தேன். ''நான் அந்த கொஸ்ட்டின் பேப்பர படிக்கவே இல்ல. பதில் எழுத ஒரு பேப்பர் கொடுத்தாங்க. அதுல நம்பர் போட்டு ஏ, பி, சி, டி னு ஆப்சன் கொடுத்துருந்தாங்க. குருட்டாம்போக்குல டிக் பண்ணினேன். அவ்ளோதான். நான்தான் பர்ஸ்ட் ரேங்க்'' என்றான் சந்தோசத்தோடு.
''நீ படிச்சி வாங்கியிருந்தா நான் பாராட்டியிருப்பேன். இத எப்படி பாராட்டுறது''னு கேட்டேன்.
''போங்கப்பா. நீங்க ஒருமுறையாவது இப்படி சர்டிபிகேட் வாங்கினது உண்டா?''னு கேட்கறான்.
என்ன பண்றது? அறிவாளிங்க இப்படித்தான் செலக்ட் ஆவாங்களோ?
சிரிங்க பாஸ்
”சார் கவுண்டவுன் முடிஞ்சு ராக்கெட் கிளம்ப போற நேரத்துல நிறுத்த சொல்றீங்களே ஏன்?”
”மடையா.. மடையா... ராக்கெட்ல எலுமிச்சம் பழம் கட்ட மறந்துட்டோமே?”
# இந்தியாவின் 100வது ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோ தலைவர் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
”மடையா.. மடையா... ராக்கெட்ல எலுமிச்சம் பழம் கட்ட மறந்துட்டோமே?”
# இந்தியாவின் 100வது ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோ தலைவர் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
Subscribe to:
Comments (Atom)