Tuesday, October 22, 2013

 
நையாண்டி 1

“தலைவர் சிபிஐ விசாரணை கேட்டிருக்காராமே எதற்கு?”

“அந்த சினிமால வந்த காட்சி நஸ்ரியா தொப்புள்தானானு உண்மையை கண்டுபுடிக்கணுமாம்.”
 
(26 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
 
 
நையாண்டி பார்ட் 2

“நீ என்னம்மா புகார் கொடுக்க வந்திருக்கே?”
“நான் கஷ்டப்பட்டு நடிச்ச தொப்புள் காட்சிய அநியாயமா நீக்கிஇருக்காங்க சார்…”
 
( 35 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
 
 
நையாண்டி பார்ட் 3

“தொப்புள் காட்சிய படமாக்கும்போதே நீ ஏம்மா தடை சொல்லல?”
“சென்ஸார்ல வெட்டிடுவாங்கனு நினைச்சேன்.”
 
(36 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.) 
 


எங்கே எப்படி இருக்க வேண்டியவன்

(கணக்குல வீக்கானவங்க படிக்காதீங்க)

சின்ன வயசுல ஒரு மளிகை கடையில வேலை பார்த்தேன். கடை முதலாளி என்னை மொத்த யாவார கடைக்கு போயி ‘சிம்னி’ வாங்கிவரச் சொன்னார்.

ஒரு பெட்டியில் 40 சிம்னிகள் இருக்கும். திறக்காமல் அப்படியே வாங்கிக் கொண்டால், விலை 100. அதாவது ஒன்றின் விலை 2.50 ஆனால், இதில் எத்தனை சிம்னி உடைந்து போயிருக்கும் என்று தெரியாது. உடைந்த சிம்னி போக மீதமிருக்கும் சிம்னிகளுக்கு 100 ரூபாயை பிரித்து, சிம்னியின் விலையை நிர்ணயிக்க வேண்டும். நிறைய உடைந்து போயிருந்தால்… விலை எகிறிடும்… கொஞ்சம் ரிஸ்க்.

அதையே திறந்த பார்த்து உடையாத சிம்னியை மட்டும் வாங்கினால் ஒரு சிம்னியின் விலை 3.

ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்பதால் திறக்காத பெட்டியையே எடுத்து திறந்து பார்த்தபோது நல்லவேளையாக 3 சிம்னி மட்டுமே உடைந்திருந்தது. சேதாரம் போக மீதி உள்ள 37 க்கு கணக்கு போட்டால், ஒன்றின் விலை 2.70 காசுதான். அதாவது இருக்கின்ற இடத்திலேயே இருந்துகொண்டு ஒரு சிம்னிக்கு 30 காசு வீதம் மொத்தம் 11 ரூபாய் லாபம் பார்த்துக் கொடுத்தேன்.

வியாபாரத்துல குதிச்சி எங்கேயோ இருக்க வேண்டியவன்… ம்…


15 அக்டோபர்